உழவுஇயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் பலி!

248 0

கிளிநொச்சி ஊரியான் பகுதியில் உழவியந்திரம் தடம்புரண்டதில் ஊரியான் பகுதியை சேர்ந்த 23 வயதான சியாந் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளர்.

குறித்த சம்பம் தொடர்பில் தெரிய வருவதாவது

இன்று காலை 8.30 மணியளவில் மண் ஏற்றிச் சென்ற வேளை ஆறு ஒன்றில் இறங்கி ஏறிய போது தடம் புரண்டதில் உழவு இயந்திர சாரதியான குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்

உடனடியாக அருகில் இருந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளதாக அறிய முடிகிறது

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a comment