மட்டக்களப்பு கல்குடா பட்டியடிச்சேனை பகுதியில் கடலில் குளிக்க சென்ற தமது மகன்மார் இருவரும் கடலில் மூழ்கி இறந்த தகவல் அறிந்த பெற்றோர்கள், அதிர்ச்சியால் வீட்டில் முன்னாள் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கல்குடா பட்டியடிச்சேனை கிராமத்தை சேர்ந்த 54 வயதுடைய வேலுப்பிள்ளை சண்முகம், அவரது மனைவியான 51 வயதுடைய சண்முகம் யோகலட்சுமி ஆகிய இருவரும், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்று மாலை தமது நண்பர்களுடன் கல்குடா பட்டியடிச்சேனை பகுதியில் கடலில் குளிக்க சென்ற 18 வயதுடைய சண்முகம் சதீஸ்குமார் மற்றும் சண்முகம் சுரேஸ்குமார் ஆகிய இருவரும் கடலில் மூழ்கி இறந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடலில் மூழ்கிய இருவரையும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் மற்றும் கடற்படையினரால், இன்று காலை சண்முகம் சதீஸ்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், சண்முகம் சுரேஸ்குமார் என்பவரை தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்தே குறித்த இளைஞர்களின் பெற்றோர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- மட்டக்களப்பில் பிள்ளைகள் மாயம் – பெற்றோர் உயிரிழப்பு(காணொளி)
மாவீரர் துயிலுமில்லம் யேர்மனி
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தொழிலாளர் எழுச்சி நாள் மே 1- யேர்மனி
April 15, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024 -
சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2024
March 27, 2024 -
தமிழ்க் கலை அறிவுக்கூடம் – பெல்சியம் 19ஆவது ஆண்டு விழா.
March 22, 2024 -
34 ஆவது அகவை நிறைவில் தமிழாலயங்கள் – யேர்மனி
March 17, 2024 -
ஈழத்தமிழர் உலகக்கிண்ணம் ,அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு – 20.4.2024
January 14, 2024