மட்டக்களப்பில் பிள்ளைகள் மாயம் – பெற்றோர் உயிரிழப்பு(காணொளி)

420 0

batti-death
மட்டக்களப்பு கல்குடா பட்டியடிச்சேனை பகுதியில் கடலில் குளிக்க சென்ற தமது மகன்மார் இருவரும் கடலில் மூழ்கி இறந்த தகவல் அறிந்த பெற்றோர்கள், அதிர்ச்சியால் வீட்டில் முன்னாள் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கல்குடா பட்டியடிச்சேனை கிராமத்தை சேர்ந்த 54 வயதுடைய வேலுப்பிள்ளை சண்முகம், அவரது மனைவியான 51 வயதுடைய சண்முகம் யோகலட்சுமி ஆகிய இருவரும், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்று மாலை தமது நண்பர்களுடன் கல்குடா பட்டியடிச்சேனை பகுதியில் கடலில் குளிக்க சென்ற 18 வயதுடைய சண்முகம் சதீஸ்குமார் மற்றும் சண்முகம் சுரேஸ்குமார் ஆகிய இருவரும் கடலில் மூழ்கி இறந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடலில் மூழ்கிய இருவரையும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் மற்றும் கடற்படையினரால், இன்று காலை சண்முகம் சதீஸ்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், சண்முகம் சுரேஸ்குமார் என்பவரை தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்தே குறித்த இளைஞர்களின் பெற்றோர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.