வலி.வடக்கில் மேலும் 201.3 ஏக்கர் நிலம் விடுவிப்பு (படங்கள் இணைப்பு)

81211 0

K800_IMG_7627இராணுவ உயர்பாதுகாப்பு வலையமாக உள்ள வலி.வடக்கில் இருந்து மேலும் 201.3 ஏக்கர் நிலம் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் இணைந்து யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ஆகியோர் இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் கையளித்துள்ளனர்.
இக் கையளிப்பு நிகழ்வு யாழ்.காங்கேசன்துறை பிரதான ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது காங்சேன்துறை, வசாவிளான், வீமன்காமம் போன்ற பகுதிகளில் இனங்காணப்பட்ட 201.3 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

K800_IMG_7576 K800_IMG_7585 K800_IMG_7601 K800_IMG_7675 K800_IMG_7627

Leave a comment