சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் கைது

446 0

201609161105415756_tamilnadu-bandh-dmk-mp-kanimozhi-arrest-in-chennai_secvpfகர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் இன்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கனிமொழி எம்.பி. இன்று காலை திடீரென்று அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். கர்நாடகத்துக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார்.

அவருடன் மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், விஜயதாயன்பன், பகுதி செயலாளர் காமராஜ், மதன்மோகன், பகுதி துணை செயலாளர் சேப்பாக்கம் சிதம்பரம் உள்ளிட்ட சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி நிர்வாகிகள் 700 பேர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார்கள்.

காவிரி நீர் பொது சொத்து, அதை யாரும் தடுக்க கூடாது. கர்நாடகமே வன்முறையை நிறுத்து போன்ற கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.அவர்களை போலீசார் கைது செய்து சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே கொண்டு சென்று தங்க வைத்தனர்.மறியல் போராட்டத்தால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.