உள்ளாட்சி தேர்தலில் போட்டி – விஜயகாந்த் முடிவால் பீதி

334 0

tamil_news_large_1605972_318_219உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடும் என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளதால், கட்சியின் மாவட்ட செயலர்கள் பீதியடைந்து உள்ளனர்.

கடந்த, 2014 லோக்சபா தேர்தல்; 2016 சட்டசபை தேர்தல் என, வரிசையாக தோல்வியை சந்தித்ததால், தே.மு.தி.க., நிர்வாகிகள் பலர் ஓடிவிட்டனர்.

மீதம் இருப்பவர்களும், கடனில் சிக்கித் தவிக்கின்றனர்.

அதனால், ‘உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்’ என, அவர்கள், கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

அதை ஏற்காத விஜயகாந்த், ‘உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடும்’ என, நேற்று அறிவித்து உள்ளார்.