காவிரி போராட்டம் – 18இல் கருணாநிதி முடிவு

331 0

karuகாவிரி பிரச்னை, உள்ளாட்சி தேர்தல் ஆகியவை குறித்து விவாதிக்க, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையில் நடக்கிறது.

காவிரி பிரச்னை தொடர்பாக தே.மு.தி.க., சார்பில் சென்னையில் 16ஆம் திகதி உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது.

அதேபோல், தி.மு.க., சார்பிலும், மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் நடத்த வேண்டும் என, கட்சி தலைமையிடம், மாநில நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, 16ஆம் திகதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.

தேர்தல் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக, மாவட்ட செயலர்கள் கூட்டத்தை, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூட்டியுள்ளார்.

சென்னை, அறிவாலயத்தில், 18ஆம் திகதி காலை நடக்கும் இந்த கூட்டத்தில், காவிரி பிரச்னையில் கர்நாடகாவை கண்டித்து, போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

அதேபோல், உள்ளாட்சி தேர்தலுக்கான கூட்டணி, விருப்ப மனு பெறுதல் உள்ளிட்ட விவகாரங்களும் பேசப்பட உள்ளன.