தமிழகத்தில் புதிதாக 10 கடலோர காவல் நிலையங்கள்

1483 0

rmslandதமிழகத்தில் இந்த வருடம் மேலதிகமாக 10 இடங்களில் கடலோரக் காவல் நிலையங்கள் திறக்கப்படும் என்று கடலோரப் பாதுகாப்பு அதிகாரி சி.சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று இதனை கூறினார்.
தமிழகத்தில் 12 கடலோரக் காவல் நிலையங்கள் இருந்தன.
கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 20 காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, இந்த ஆண்டு புதிதாக 10 காவல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
இதன்மூலம் 20 கிலோ மீட்டருக்கு ஒரு காவல் நிலையம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment