மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கடலுணவு நிலையம் திறப்பு (படங்கள்)

353 0

battiமட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பெண்களால் நடாத்தப்படும் கடலுணவு நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டது.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் நிதியுதவியுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக ரீதியான பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டத்தில், பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இவ் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

batti-1
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ஆர்.சிவப்பிரகாசம், மாவட்டதிட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

batti-7
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலையும், குடும்பங்களைத் தலைமை தாங்கும் பெண்களின் வீதமும், அதிகமாகக் காணப்படும் நிலையில் இத்தகைய வேலைத்திட்டங்கள் அவ்வாறான நிலையினைக் குறைப்பதற்கு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.