புதுச்சேரியை முன்மாதிரி மாநிலமாக்குவேன் – மாநில முதல்வர் நாராயணசாமி உறுதி

856 0

nayarana_2908523fபாஜகவுடனான நட்பை பயன்படுத்தி புதுச்சேரியை முன்மாதிரி மாநிலமாக்குவேன் என மாநில முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று அவர் வருகை தந்தார்.
அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பொருளாளர் நாசே ராமச்சந்திரன், மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதன்போது கருத்துரைத்த அவர், திமுக ஆதரவுடன் புதுச்சேரியில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் என்னை முதல்வராக அறிவித்தனர்.
இந்த நிலையில் முதல்வராக பொறுப்பேற்றதும் பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து புதுச்சேரிக்கான நிலுவைத் திட்டங்களை செயல்படுத்தவும், அதிக நிதி ஒதுக்கவும் கோரிக்கை விடுத்தோம்.
புதுச்சேரியை முன்மாதிரி மாநிலமாக்குவதே தமது நோக்கம் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Leave a comment