சம்பவத்தினை மூடி மறைக்க முற்பட்டார் – பெண் ஆசிரியர் ஒருவர் கைது

800 0

sexual-abuseயாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் ரீதியிலான தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தினை தெரிந்து கொண்டும் அச் சம்பவத்தினை மூடி மறைக்க முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் அப்பாடசாலையின் பெண் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

விசாரணையின் பின்னர் அவரிடம் வாக்குமூலம் ஒன்றினை பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

இதன் பின்னர் கைது செய்யப்பட்ட ஆசிரியர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த நீதவான் அவரையும் எதிர்வரும் யூலை மாதம் 4 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a comment