காவிரி விவகாரம் – முழு அடைப்பு போராட்டத்தில் போக்குவரத்து சங்கங்களும் பங்கேற்பு

988 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 5-ம் தேதி நடக்க உள்ள முழு அடைப்பு போராட்டத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யூ போக்குவரத்து சங்கங்கள் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 5-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில், இந்த முழு அடைப்பில் தொ.மு.ச, சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 15 போக்குவரத்து சங்கங்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளன.

மேற்கண்ட சங்க பணியாளர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பால் விநியோகம் இருக்காது என பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a comment