ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனையில் உணவு நஞ்சானது – 98 பேர் வைத்தியசாலையில்!

304 0

ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை புனித அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 98 பேர் ஊர்காவற்றுறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒரு பகுதியினர் தற்போது யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுவருகின்றனர்.

நேற்று சனிக்கிழமை ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுறை புனித அந்தோனியார் ஆலயத்தில் இருபகுதியினரால் விருந்தளிக்கப்பட்டதாகவும் அவ்வாறு வழங்கப்பட்ட உணவு நஞ்சூட்டப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படுகின்றது.
திட்டமிட்டு நஞ்சூட்டப்பட்டதா அல்லது எதிர்பாராத வகையினதாவென்பது தொடர்பில் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தொடர் வாந்தி ,வயிற்றோட்டமென்பவை அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிலரது உடல்நழலை மோசமான கட்டத்திலுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment