கூட்டமைப்பின் கூட்டத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு மக்கள் மீது சோதனைக் கெடுபிடி!

18570 0

புதுக்குடியிருப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கும் பரப்புரை கூட்டத்திற்கு சென்ற மக்கள் தீவிர சோதனைக் கெடுபிடிக்கு உட்படுத்தப்பட்டிக்கின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு ஐயன்கோவிலுக்கு அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெறுகின்றது.

இந்த நிகழ்விற்காக அழைக்கப்பட்ட மக்கள் பொலிஸாரின் தீவிர சோதனைக் கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். குழந்தைகளுடன் செல்லும் தாய்மார் முதியவர்கள் உட்பட அனைவரும் தீவிர உடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இது குறித்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Leave a comment