நாட்டுப்பற்றாளர் அமரர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு

1153 0

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையின் வூப்பெற்றால் நகரச் செயற்பாட்டாளர் அமரர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று 5.1.2018 வெள்ளிக்கிழமை வூப்பெற்றால் நகரில் உள்ள Katholischer Friedhofஇல் நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டு தங்கள் இறுதிவணக்கத்தைத் தெரிவித்தனர்.

அமரர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் சமயக் கிரியைகளின் நிறைவில், வூப்பெற்றால் நகரச் செயற்பாட்டாளர்களால் தமிழீழத் தேசியக்கொடி சுமந்துவரப்பட்டு அன்னாரின் பூதவுடலுக்கு போர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தால் வழங்கப்பட்ட நாட்டுப்பற்றாளர் எனும் மதிப்பளிப்பு வாசித்தளிக்கப்பட்டது.

மேலும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையினால் அன்னாருக்கு அகவணக்க அறிக்கை வாசிக்கப்பட்டது. பின்பு தமிழீழத் தேசியக் கொடியும் தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட நாட்டுப்பற்றாளர் எனும் மதிப்பளிப்பும் நாட்டுப்பற்றாளர் அமரர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் துணைவியாரிடம் கொடுக்கப்பட்டது. பின் அனைத்து மக்களும் அன்னாரது பூதவுடலுக்குப் பின்னால் அணியாகச் சென்று புதைகுழியில் மலர்தூவி புதைக்கப்பட்டது.
https://youtu.be/dWCcbJ8ISPM
https://youtu.be/3QHrRP4SQ9A

Leave a comment