ஆவா குழுவின் முக்கியஸ்தர் சின்னா கைது

416 0

ஆவா குழுவின் முக்கியஸ்தர் ஒருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். சுதுமலை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் வைத்து இன்று (23.11) காலை மானிப்பாய் பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர். 

சின்னா என அழைக்கப்பட்ட ரவிகிருஸ்ணா (வயது 23) என்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும், ஆவா குழுவில் முக்கிய அங்கம் வகித்து வந்தவர் என்றும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இவரை பொலிஸ் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் மானிப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment