சென்னையை உலுக்கும் வெள்ளம்

309 0

சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல பகுதிள் நீரில் மூழ்கியுள்ளன.

கடந்த 31ஆம் திகதி முதல் பெய்து வரும் கடும் மழையால் சென்னை நகரில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் இதுவரை 8 பேர் உயிரிந்துள்ளதாக தமிழ செய்திகள் தெரிவிக்கின்றன.

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக 105 நிவாரண முகாம்கள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையுடன் நாகபட்டினத்திலும் பெயந்து வரும் கடும் மழையால் பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், ஆயிரக்காணக்கான வயல் நிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை 2015ஆம் ஆண்டும் சென்னை வெள்ளத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment