கார்லஸ் பியுஜ்மன்ட் மக்களுடன் சந்திப்பை நடத்தவிருப்பதாக அறிவிப்பு

369 0

கட்டலோனியாவின் சர்ச்சைக்குரிய தலைவர் கார்லஸ் பியுஜ்மன்ட், ப்ரசல்ஸில் மக்கள் சந்திப்பை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சட்டத்தரணி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்பெயினில் இருந்து பிரிந்து கட்டலோனியாவை தனி நாடாக அறிவிக்கும் அவரது முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

தற்போது அந்த பிராந்தியத்தின் முழுமையான கட்டுப்பாட்டை ஸ்பெயின் கைக்கொண்டுள்ளது.

அத்துடன் தனிநாட்டுக்கான முயற்சிகளை மேற்கொண்ட பிராந்தியத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட பலருக்கு எதிராக குற்றவியல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் இதுநாள் வரையில் பொதுவெளியில் தோன்றாதிருந்த கார்லஸ், விரைவில் ப்ரசல்ஸில் மக்கள் சந்திப்பை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment