யாழ். பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

314 0
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கலை, விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ கற்கை வணிக பீடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக நிர்வாகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் குறித்து துணைவேந்தருடன் பீடாதிகள் இன்று முற்பகல் கூடி ஆராய்ந்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
பல்கலைகழகத்தின் பிரதான வளாகம், அனைத்து மாணவர்களுக்கும் பிரவேசிக்க தடைசெய்யப்பட்ட வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விடுதி மாணவர்களை நாளை பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முதல் மறியல் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment