புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கு மாநாயக்க தேரர்கள் எதிர்ப்பில்லை

Posted by - October 28, 2017

“புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்­ப­தற்கு மா­நா­யக்க தேரர்கள் எதிர்ப்­பில்லை. ஒரு சில தேரர்கள் கூறிய கருத்­து­க­ளுக்கு மா­நா­யக்­கர்கள் பொறுப்­பில்லை.

மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு

Posted by - October 28, 2017

யாழ். மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியால 2017 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வும் அமைச்சர்கள் பதவியேற்பும் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது வித்தியாலய மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.வித்தியாலய முதல்வரும் மாணவர் நாடாளுமன்றச் செயலாளருமான சு.சிவானந்தன் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் சு.சுந்தரசிவமும்,சிறப்பு விருந்தினராக பிரிவு கிராம அலுவலர் சு.உலகநாதனும், கௌரவ விருந்தினராக வித்தியாலய பிரான்ஸ் கிளை பழை மாணவர்கள் சங்க உறுப்பினர் ஐ.செல்வராஜாவும் கலந்து சிறப்பித்தனர்.

நல்­லாட்­சியின் அனைத்து ஊழ­லையும் வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு நாங்கள் தயார்

Posted by - October 28, 2017

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அனைத்து ஊழல்­க­ளையும் வெளிப்­ப­டுத்­த தமது தரப்­பினர் தயா­ரா­க­வி­ருப்­ப­தா­கவும் தமது ஆட்சி ஏற்­பட்­டதும்  அதற்­கு­ரிய  சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மெ­ன கூட்டு எதிர்க்­கட்­சியின் ஆத­ர­வா­ளரும் அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  நாமல் ராஜ­பக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்துக்கு ஒரு குண்டு அல்ல 100 குண்டுகள் போடப்பட வேண்டும்- கெஹலிய

Posted by - October 28, 2017

பாராளுமன்றத்துக்கு இருந்த அதிகாரத்தை இல்லாமலாக்கி பெயரளவிலான பாராளுமன்றமாக மாற்றும் அரசியல் யாப்பை நிறைவேற்ற முற்படும் இப்பாராளுமன்றத்துக்கு ஒரு குண்டு அல்ல 100 குண்டுகள் போடப்பட வேண்டும் என கூட்டு எதிர்க் கட்சி சார்ப்பு பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவின் நுகவெல காரியாலயத்தில் இன்று (28) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஏற்கனவே, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச பாராளுமன்றத்துக்கு

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரம் திரட்டும் பொலிசார்

Posted by - October 28, 2017

வவுனியா, கனகராயன்குளம் பகுதியிலுள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களைப் பொலிசார்  திரட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டுக்கு ஒவ்வாத அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கப்படா – மஹிந்த அமரவீர

Posted by - October 28, 2017

கூட்டு எதிர்க் கட்சியிலுள்ளவர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும், எதிர்வரும் தேர்தலில் அவர்களையும் அரவணைத்துக் கொண்டு வெற்றிபெற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வட்டகொட, மடக்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இன்று (28) உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டுக்கு ஒவ்வாத அம்சங்களை புதிய அரசியல் யாப்பு சுமந்து வருமாக இருந்தால், அதற்கு எதிராக வாக்களிக்கவும் தாம் தயாராகவுள்ளதாகவும் இவ்வுரையின் போது

வடக்குக் கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களுக்கு நானே தலைவன் – மனோ கணேசன்!

Posted by - October 28, 2017

வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதித்துவப்படுத்துவதுபோல், வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ் மக்களை எமது கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி