இணைக்கப்பட்ட வடகிழக்கிலேயே புதிய தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்-சிவில் சமூக அமைப்புகள்

Posted by - October 29, 2017

இணைக்கப்பட்ட வடகிழக்கிலேயே புதிய தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும், வடகிழக்கு இணைப்பு இல்லாத எந்த தீர்வுத் திட்டத்தினையும் ஏற்பதற்கான ஆணையை அரசியல்வாதிகளுக்கு வழங்கவில்லையென, கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அத்துடன், வடகிழக்கு இணைப்பினை உறுதிப்படுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் அமைப்புகள் இணைந்து முதன்முறையாக இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. மட்டக்களப்பு புகையிரத வீதியில் உள்ள அரசசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியமான இணையம் காரியாலயத்தில்

தலை நிமிர்ந்து வாழ்ந்த மண்ணில் இன்று வாழவே முடியாத அவலம்! – அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - October 29, 2017

தமிழர்கள் தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழ்ந்த மண்ணில் இன்று உயிர் வாழவே முடியாத அவலம் ஏற்பட்டுள்ளதை நெற்றிப்பொட்டில் அறையும் விதமாகவே அரியாலை துயரம் நிகழ்ந்தேறியுள்ளதாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது… நீடித்த காலம் வாழ ஆசைப்பட்டோம். இறுதிவரை அதற்காக போராடினோம் முடியவில்லை… போகிறோம். எமக்கான நியாயத்தினை பெற்றுக்கொடுங்கள் என்று கச்சிதமான வார்த்தைக்குள் எமது கையாலாகத்தனத்தை இடித்துரைத்துச் சென்றுள்ளது இவர்களின் அவலச்சாவு. குடும்ப நண்பர்

துறை­முக நக­ரி­லி­ருந்து கொள்­ளுப்­பிட்டி வரை சுரங்கப்­பாதை

Posted by - October 29, 2017

கொழும்பு துறை­முக நக­ரத்­துக்கும் கொள்­ளுப்­பிட்டி ரயில் நிலை­யத்­திற்­கு­மி­டையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் நீள­மான சுரங்­கப்­பா­தை­யொன்றை அமைக்க அர­சாங்கம் திட்­ட­ மிட்­டுள்­ளது. இது இந்­நாட்டின்  முத­லா­வது  நீள­மான   சுரங்­கப்­பா­தை­யாக இருக்கும்.  துறை­முக  நக­ருக்கு  அரு­கி­லி­ருக்கும்  சைத்­திய வீதி­யி­லி­ருந்து பழைய பாரா­ளு­மன்றம், காலி­மு­கத்­திடல்,  கோல்பேஸ் ஹோட்டல்  ஆகி­ய­வற்றின் கீழாக இந்த சுரங்கப் பாதை நிர்­மா­ணிக்­கப்­படும் என மாந­கர மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் பாட்­டலி  சம்­பிக ரண­வக தெரி­வித்­துள்ளார். கட்­டு­நா­யக்க அதி­வேக நெடுஞ்­சாலை பேலி­ய­கொ­டையில்  வலது புற­மா­கவும்  இடது புற­மா­கவும்

மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது

Posted by - October 29, 2017

போலியான நில பத்திரம் ஒன்றை தயாரித்து நில பகுதி ஒன்றை விற்பனை செய்த நபர் ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் அதனை 6 லட்சத்து 50 ஆயிரத்து விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளமை அறியவந்துள்ளது. சந்தேக நபர் 31 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது

TJC இன மாங்கன்றுகள் வழங்கி வைப்பு!

Posted by - October 29, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட அம்பாள்புரம் கிராம சேவையாளர் பிரிவு மக்கள் மற்றும்  துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட தென்னியன்குளம் உயிலங்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 141 குடும்பங்களுக்கு தலா 2 5 மாங்கண்டுகள் வீதம் இத்திட்டத்தில் மாங்கண்டுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன இதனுடைய ஆரம்ப நிகழ்வு இன்று காலை அம்பாள்புரம் கிராமத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் றோகன கமகே அவர்கள் கலந்துகொண்டுமாங்கண்டுகள் வழங்கி வைத்தார்.

பொருளாதார நடைமுறையை மாற்றும் வரவுசெலவுத் திட்டம்-ஹர்ஷ டி சில்வா

Posted by - October 29, 2017

பொருளாதார நடைமுறையை மாற்றும் வரவுசெலவுத் திட்டம் ஒன்று இந்த முறை கொண்டுவரவுள்ளதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் எதிர்கால திட்டம் குறித்து எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரிவித்தார். வாழ்வாதார செலவை குறைப்பதற்கும் தொழிநுட்ப மற்றும் தொழிற்துறைக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க இந்த வரவுசெலவு திட்டத்தின் மூலம் எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

9 ஆயிரம் ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஜன­வ­ரியில் இட­மாற்றம்-அகி­ல­விராஜ் காரி­ய­வசம்

Posted by - October 29, 2017

தேசிய பாட­சா­லை­களில், ஒரே பாட­சா­லையில் சுமார் 10 வரு­டங்­க­ளுக்கும்  மேல் சேவை செய்த மேலும் 9 ஆயிரம் ஆசி­ரி­யர்கள்   2018ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதல் இட­மாற்றம் பெறுவர் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வா­சி­ரி­யர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் கவனம்  செலுத்­தி­யுள்ளார். நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள 353 தேசிய பாட­சா­லை­களில், சுமார் 37 ஆயிரம் ஆசி­ரி­யர்கள் சேவை­யாற்றி வரு­கின்­றனர். இவர்­களில் 12 ஆயிரம் பேர் ஒரே பாட­சா­லையில், சுமார் 10 வரு­டங்­க­ளுக்கும் மேல் சேவை­யாற்­றி­யுள்­ளனர். இவ்­வா­றான ஆசி­ரி­யர்­களில்

அரசியலமைப்பு ஏற்கனவே தயாராகிவிட்டது- விமலரதன தேரர்

Posted by - October 29, 2017

புதிய அரசியலமைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் வண.பெல்லன்வில விமலரதன தேரர். புதிய அரசியலமைப்புக்கான எதிர்ப்புகள் இன்னும் அடங்காத நிலையில், அரசியலமைப்புப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டதாக அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் என்னிடம் தெரிவித்துள்ளார். மேலும், அரசியலமைப்பைத் தயார் செய்த இரண்டு பேரின் பெயர்களும் எனக்குத் தெரியவந்துள்ளது. அது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்” என்று தேரர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு வெகு விரைவில் பாராளுமன்றில்

5 மாவட்டங்களுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை

Posted by - October 29, 2017

நாட்டில் தொடர்ச்­சி­யாக நில­வி­வரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நாட்டின் ஐந்து மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. இரத்­தி­ன­புரி, கண்டி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளுக்கே இவ்­வாறு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு மலைப்­பாங்­கான பிர­தே­சங்­களில் வாழும் மக்கள் அதிக மழை பெய்யும் சந்­தர்ப்­பங்­களின் போது மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­மாறும் கோரிக்கை விடுக்­கப்­ப­டுக்­கப்­பட்­டுள்­ளது. இதனிடையே மழையுடனான காலநிலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கால நிலை அவதான

பேசுபொருளாக மாறியுள்ள அரசியல் யாப்பு-துமிந்த

Posted by - October 29, 2017

தற்போது அரசியல் யாப்பு பேசுபொருளாக மாறியுள்ளது. சிலர் இதை பற்றி பேசுவதற்கு விரும்பவில்லை. ஒருசிலர் இந்த விடயம் தொடர்பில் பேசுவதில் பயம். ஆனால் நாட்டில் யாப்பு சீர்திருத்தம் ஒன்றின் அவசியம் தொடர்பில் பேசுவது இது முதல் சந்தர்ப்பம் அல்ல. மஹிந்த, மைத்திரி ஆகிய இருவருமே இது தொடர்பில் பேசுயுள்ளனர் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளரும், விவசாயத்துறை அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார் வட்டகொட மடக்கும்புர பிரதேசத்தில் வெலிகல வாவி புனரமைக்கப்பட்டு  மீன் குஞ்சுகள் இடும்