நிலையவள்

ராகல வர்த்தகரின் மரணத்தில் சந்தேகம்

Posted by - March 21, 2017
மஹியங்கனை – லொக்கல் ஓயா ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகரின் மரணம், சந்தேகத்திற்குரியது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 3 நாட்களாக காணாமல் போயிருந்த நுவரெலிய – ராகல பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான வர்த்தகரின் சடலம் குறித்த ஆற்றில் இருந்து நேற்று…
மேலும்

சர்வதேச நீதிபதிகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது – பீரிஸ்

Posted by - March 21, 2017
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டாவது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பான…
மேலும்

மார்ச் 12 இயக்கம் மக்களை தெளிவுபடுத்தும் செயற்ப்பாட்டில்

Posted by - March 21, 2017
புதிய உள்ளுராட்சி அதிகார சபை தேர்தல் முறையுடன் புதிய அரசியல் கலாசாரமொன்றை கட்டிஎழுப்புவோம் என்ற அடிப்படையில் மார்ச்சு 12 இயக்கம் நடாத்தும் விழிப்புணர்வு செயற்ப்பாடு இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றது அந்தவகையில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் காலை 11…
மேலும்

முல்லைத்தீவில் அதிவேக சிங்கள குடியேற்றம்

Posted by - March 21, 2017
வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டமானது, மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், படையினருக்கான நில சுவீகரிப்புக்கள், கடல்வள சுறண்டல்கள், பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவ மயமாக்கல் போன்றவற்றினால் விழுங்கப்பட்டு வருகின்றது. முழுமையாக விழுங்கப்படுவதற்கு முன்னர், மாவட்டத்தையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்”என,…
மேலும்

கிளிநொச்சியில்காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தில் தாயார் ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில்….(காணொளி)

Posted by - March 21, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாயார் ஒருவர்  மயங்கி வீழ்ந்த நிலையில், கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த மாதம் 20ஆம் திகதி காலை முதல், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…
மேலும்

கோட்டாபய ராஜபக்ச, ஊடகவியலாளர்கள் மற்றும் மாற்றுக் கருத்துடையவர்களை பழிவாங்குவதற்காக உயர்மட்ட படுகொலைக் கும்பலொன்றை இயக்கி வந்துள்ளார்- குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசார் (காணொளி)

Posted by - March 21, 2017
  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, ஊடகவியலாளர்கள் மற்றும் மாற்றுக் கருத்துடையவர்களை பழிவாங்குவதற்காக உயர்மட்ட படுகொலைக் கும்பலொன்றை இயக்கி வந்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று…
மேலும்

வட பகுதியில் இராணுவ ஆட்சியே நடகின்றது ,நல்லாட்சி நடைபெறவில்லை – எஸ்.சிவமோகன் (காணொளி)

Posted by - March 21, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் ‘வட பகுதியில் இராணுவ ஆட்சியே நடப்பதாகவும், நல்லாட்சி நடைபெறவில்லை” என்றும் குறிப்பிட்டார்.
மேலும்

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கடந்த 21 நாட்களாக மக்கள் போராட்டத்தில்..(காணொளி)

Posted by - March 21, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கடந்த 21 நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உடல்நலக்குறைவு, திடீர் மயக்கம் போன்றவற்றினால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் பலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள சிறுவர்கள் ஒரு வகையான காய்ச்சலினால்…
மேலும்

வவுனியா மதவாச்சி பூனாவை பகுதியில் வாகன விபத்து ஒருவர் பலி(காணொளி)

Posted by - March 21, 2017
  வவுனியா மதவாச்சி பூனாவை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதவாச்சி பூனாவை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளார். ரம்பாவ பகுதியிலிருந்து வவுனியா நோக்கி அரிசிகளை ஏற்றிச் சென்ற பட்டா…
மேலும்

நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23047 பேர் டெங்கு நோயாளர்கள்

Posted by - March 21, 2017
நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23047 பேர்  டெங்கு நோயாளர்கள் இனங்கானப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த நோயினால் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் வருடத்தின் மூன்று மாதக்காலப்பகுதிக்குள்  17  பேர் மரணித்துள்ளனர். இம்மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்பிரல்…
மேலும்