மாற்றம் என்பதே என்றும் மாறாதது. இது இயற்கையின் நியதி. மாற்றத்திற்குட்படாதது என்று எதுவும் இதுவரையில் இப்பிரபஞ்சத்தில் இருந்ததில்லை இனியும் இருக்கப் போவதில்லை.
வற்வரி இன்றுமுதல் 11 வீதமே அறவிடப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.உயர் நீதிமன்றம் நேற்றுவழங்கிய தடையுத்தரவினையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வற்வரி அதிகரிப்பு மற்றும் தேசிய கட்டுமான வரி ஆகியவற்றை நிறுத்துமாறு கடந்த திங்கட்கிழமை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் லிபரல் ஜனநாயக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்த்து தற்போது ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ளன. இது ஜப்பானின் அமைதியை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தை மறு ஆய்வு…
ஜெர்மனி நாட்டில் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் வாழ்ந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஜெர்மனியில் டைனோசர்கள் வாழ்ந்தனவா என்பது குறித்து பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
தெற்கு சூடானில் இரு தரப்பு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமை கடும் சண்டை ஏற்பட்டது. இதில் 272 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்த சண்டை மேலும் தீவிரமடைந்துள்ளது.
இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றிபெற்றது. இதனால் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான…
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் வடபகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் நகரில் உள்ள பெரியன் கவுன்ட்டி நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒருகைதி திடீரென்று அங்கிருந்த காவலரின் துப்பாக்கியை பறித்து கண்மூடித்தனமாக சுட்டார்.
தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் உள்ள தலைநகரங்களில் உள்ள பஸ்நிலையம், பூங்காக்களில் இலவச ‘வை-பை’ வசதியை தொடங்க முடிவு செய்துள்ளது. இந்த சேவை செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சீர்திருத்த பள்ளியில் சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவத்திற்கு காவல்துறை கவனக் குறைவே காரணம் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னையில் உள்ள புரசைவாக்கத்தில் அமைந்துள்ள சிறுவர்கள் சீர்த்திருத்த பள்ளியில், மாணவர்கள்…