யாழ். பல்கலைக்கழக மாணவா்களின் கொலையை கண்டித்து கடந்த மாதம் 25ஆம் திகதி வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தின் போது கிளிநொச்சியில் அமைதியின்மையை தோற்றுவித்தவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அரசியல் அமைப்பின் பிண்ணனியில் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் எனவும், இது தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வடக்கில் உரிய நிர்வாகம் நடைபெறுவதில்லை எனக் கூறி, ஐக்கிய நாடுகள் அமைதிப்படையை இலங்கைக்கு கொண்டு வரும் நோக்கில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் மைத்திரிபால சிறிசேனவை போட்டியிட வைக்கும் நோக்கில், அவரது விருப்பத்தை பெற்றுக்கொள்ள திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஸ சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் பாதீட்டுக்கு ஒன்றுக்கொன்று வேறுபட்டக் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக கூறப்படுகின்றது.