ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிகள் ஏப். 17-ந்தேதி முடிவடைவதால், அதற்கு பிறகு சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் சர்ச்சை அடுத்த மாதம் 17-ந்தேதிக்கு பிறகு விசாரிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படுவார் என்று பொலிஸ் தலைமையக தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய காவல்துறை உறுப்பினர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளமை தொடர்பாக காவல்துறை தலைமையகம் விளக்கமளித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதப் பங்குகளை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கும், அதனையொட்டியதாக கைத்தொழில் வலயம் ஒன்றை அமைப்பதற்கும் சீன நிறுவனத்துடன் செய்து கொள்ளப்படும் உடன்பாட்டுக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவை வளாகத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உப குழுக் கூட்டத்தில் இலங்கையிலிருந்து சென்றிருந்த பிரதிநிதி சரத் வீரசேகரவுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது.