வடகிழக்கு இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்குத் தனியான அதிகார அலகொன்றை வழங்க வேண்டும் என்று நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான இராமநாதன் கண்ணனை, மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரை, அதிகாரமற்ற பரிந்துரை என்று நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப் பீட வரவேற்பு நிகழ்விற்கு முதல்நாள் இரவு இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் கலைப்பீடத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
மலையகத்தில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவிற்கு சென்ற மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்ட பெண்மணி ஒருவர் சித்திரவதைக்குள்ளாகி மரணித்த நிலையில் அவரது சடலம் 5 மாதங்களுக்கு பிறகு இலங்கையில் உள்ள உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
படகொன்றின் மூலம் 43 புகலிடக் கோரிக்கையாளர்கள் நியூசிலாந்திற்குப் புறப்பட்ட வேளையில் படகின் இயந்திரம் பழுதடைந்து இந்தோனேசிய கரையை அடைந்ததாக இப்படகில் பயணம் செய்தவரும், இந்த வாரம் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை ஒன்றைப் பிரசவித்தவருமான தாயொருவர் தெரிவித்தார்.
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் யாழ்.இந்து கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் A தர சித்தி பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் 5ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.