தென்னவள்

வவுனியா வங்கி ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

Posted by - April 20, 2022
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.
மேலும்

ரம்புக்கனை சம்பவம் ; விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழுவை நியமித்தது மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted by - April 20, 2022
கேகாலை – ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் இதன் போது ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மூவரடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பதுளையில் கையெழுத்து போராட்டம்

Posted by - April 20, 2022
பதுளை பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (20) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டம் கோத்தா கோ ஹோம்  பதுளைக்கிளை ஊடாக முன்னெடுக்கப்பட்டது
மேலும்

இலங்கை மத்திய வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - April 20, 2022
இலங்கை மத்திய வங்கியின் ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்குமாறும் அரசியல் தலையீடுகளை நிறுத்துமாறும் கோரியே  அவர்கள்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

3 முஸ்லிம் எம்.பிக்கள் அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவு வாபஸ்

Posted by - April 20, 2022
ஆளும் கட்சியில் அங்கம் வகித்த பாராளுமன்ற உறுப்பினர்களான தௌபீக், இர்ஷாத் ரஹ்மான், பைசல் காசிம் ஆகிய மூவரும் அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை, வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும்

உணவு ஒவ்வாமையால் 322 ஊழியர்கள் பாதிப்பு

Posted by - April 20, 2022
கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் 322 ஊழியர்கள் இன்று(20) காலை உணவு ஒவ்வாமை காரணமாக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

“இது ராஜபக்‌ஷர்களின் நாடு அல்ல”

Posted by - April 20, 2022
நாடு இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும். ராஜபக்‌ஷர்களின் குடும்பமே ஆட்சிசெய்யவேண்டும் என்ற நினைப்பை கைவிடவும், இது ராஜபக்‌ஷர்களின் நாடு அல்ல, இப்போது போது, தயவு செய்து, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவும் என்று, ஆளும் கட்சியில் இருந்து விலகி, சுயாதீனமாக…
மேலும்

மாட்டு வண்டியில் பாடசாலை செல்லும் ஆசிரியர்கள்

Posted by - April 20, 2022
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில ஆசிரியர்கள் சிலர், மாட்டு வண்டியில் பாடசாலைக்குச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக​வே, ஆசிரியர்கள் சிலர் மாட்டுவண்டியில் பாடசாலைக்குச் சென்றுள்ளனர்.
மேலும்

“ஒருவரை கொன்றதால் 300 பேர் தப்பினராம்”

Posted by - April 20, 2022
எனது நண்பர்தான் பாதுகாப்பு அமைச்சர், அவர் பதவியேற்று 24 மணிநேரத்துக்குள் ஒருவர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். அப்படியாயின், அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மேலும்

எதிர்கட்சியின் கோரிக்கைக்கு அரசாங்க தரப்பு இணங்கவேண்டிய நிர்ப்பந்தம்

Posted by - April 20, 2022
நாடாளுமன்றத்தில் இன்று பகல் நேர போசனத்துக்காக நேரம் ஒதுக்குவது தொடர்பில் எதிர்கட்சியின் கோரிக்கைக்கு அரசாங்க தரப்பு இணங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
மேலும்