தென் ஆப்பிரிக்காவில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி விலக மறுத்ததால் அவரை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சிரியாவில் பொதுமக்களுக்கு எதிராக தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை அரசுப் படைகள் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் தாக்குதல் நடத்தப்படும் என பிரான்ஸ் எச்சரித்துள்ளது.
ஓ.பி.எஸ். இனி வரும் தேர்தலில் போட்டியிடும் தொகுதியில் டெபாசிட் இழப்பார் எனவும் பின்னர் அவர் ஏற்கனவே என்ன தொழில் செய்தாரோ அந்த தொழிலுக்கே அனுப்பி வைக்கப்படுவார் எனவும் தினகரன் கூறியுள்ளார்,
அ.தி.மு.க. அரசு தனியார் பஸ் உரிமையாளர்களிடம் ரூ.400 கோடி பேரம் பேசி பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.