நிலையவள்

காட்டுயானை தாக்கி நபரொருவர் பலி

Posted by - March 22, 2017
கலென்பிந்துனு வெவ – யகல்ல உல்பத்ஹார பிரதேசத்தில் காட்டுயானை தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை உயிரிழந்தவர் வீட்டின் அருகில் நின்றிருந்த வேளை , இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். உயிரிழந்தவர் 48 வயதுடையவராவார்
மேலும்

காலி முகத்திடல் வீதி லோடஸ் சுற்றுவட்டத்தில் மூடப்பட்டுள்ளது

Posted by - March 22, 2017
பல்கலைக்கழக மாணவ பிக்குகளின் எதிர்ப்பு பேரணி காரணமாக காலி முகத்திடல் வீதி லோடஸ் சுற்றுவட்டத்தில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
மேலும்

சமீர சேனாரத்ன மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு

Posted by - March 22, 2017
மாலபே தனியார் மருத்துவமனையின் பிரதான நிறைவேற்று அதிகாரி சமீர சேனாரத்ன மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு மாற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் தேடப்படுபவர்களான முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், மேலுமொரு சந்தேகத்துக்குரியவரும் கடுவல நீதிமன்றில்…
மேலும்

நிலையான அபிவிருத்தி பேரவை அமைக்க நடவடிக்கை –ரணில்

Posted by - March 22, 2017
நிலையான அபிவிருத்தி பேரவையை அமைப்பதற்கான சட்டமூலத்தை இலங்கை தயாரித்திருப்பதாக  ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிலையான அபிவிருத்தி; இலக்குகளை அடைவது தொடர்பான வேலைத்திட்டங்கள் பற்றி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செயலமர்வு பாராளுமன்ற வளாகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதில்…
மேலும்

551 பேர் கோத்தபாயவின் கொலைப்படையினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் – மனோ

Posted by - March 22, 2017
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் 551 பேர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். கொழும்பு நகரிலும், அதன் புறநகரங்களிலும் இவ்வாறு மனிதக் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவ்வாறு கடத்திச்…
மேலும்

டெங்கை கட்டுப்படுத்துவதில் பிரதேச சபை ஊழியர்களின் உழைப்பு மகத்தானது

Posted by - March 22, 2017
டெங்கை கட்டுப்படுத்துவதில் பிரதேச சபை ஊழியர்களின்  உழைப்பு மகத்தானது சுகாதார சேவைகள பிரதிப் பணிப்பாளர் கார்த்திகேயன். கிளிநொச்சியில் டெங்கு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு பிரதேச சபைகளின் சிற்றூழியர்களின்  உழைப்பு மகத்தானது நேரம் காலம் பார்க்காது பணியாற்றியதன் பயனாக கிளிநொச்சில் டெங்கு நோயை…
மேலும்

வவுனியா இறம்பைக்குளம் பாடசாலைக்கான குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி சுகாதார அமைச்சரால் திறந்துவைப்பு

Posted by - March 22, 2017
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்திற்கான (தேசிய பாடசாலை) குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கத்தினால்  மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் சீறுநீரக நோயின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் சுகாதார அமைச்சரினால் இதுவரை எட்டு…
மேலும்

யாழில் தொடரூந்துடன் ஆட்டோ மோதி விபத்து

Posted by - March 22, 2017
யாழ்ப்பாணம் தச்சன் தோப்பு பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்படட ஆட்டோ ஒன்று கொழும்பிலிருந்து வந்த கடுகதி ரயிலுடன் மோதியதில் சாரதி தூக்கிவீசப்பட்டு படுகாயங்களுடன் மயிரிழையில் உயிர்தப்பினார் . இந்த சம்பவம் இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றது .ஆட்டோ வில்…
மேலும்

வடமாகாண அமைச்சர்களுக்கெதிரான விசாரணை குழுவினர் கள விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Posted by - March 22, 2017
வட மாகாண அமைச்சர்களிற்கு எதிரான முறைப்பாட்டினை விசாரணை செய்த குழுவினர் தமது விசாரணைகளை நிறைவு செய்த்தனையடுத்து பல இடங்களிற்கும் நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். வட மாகாண அமைச்சர்களிற்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகளை விசாரணை செய்வதற்காக வட மாகாண முதலமைச்சரினால் இரு…
மேலும்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை யாழில் தீவிரம்

Posted by - March 22, 2017
டெங்கு ஒழிப்பு வாரத்தில் யாழ் குடாநாட்டுன் 12 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் 9 பிரிவுகளில் தீவிர பணியை முன்னெடுக்கவுள்ளதாக பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.டெங்கு கட்டுப்பாட்டு வாரத்திற்கான செயல்பாடுகள் தொடர்பில் நேற்றைய தினம் யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற விசேட…
மேலும்