முல்லைத்தீவு கடலில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நீராடிக்கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தென்னை பயிர்செய்கை மூலம் வருமானமாக 900 மில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றுள்ளதாகதென்னை கித்துள் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பர்ணான்டு தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 144 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 2 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
வட்டுக்கோட்டை – குக் ரோட் முதலாம் ஒழுங்கையில் இன்று பாரதியாரின் உருவச்சிலை திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக சிலையினை திரைநீக்கம் செய்து திறந்துவைத்தார்.
பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் குளிர்கால ஒலிம்பிக் போட்டி விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான முடிவை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளன.