முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தனது அமெரிக்க பயணத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் முன்னர் அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிர்வரும் 11 ஆம் திகதி விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் பொது மக்கள் கடும் இக்கட்டான சூழ்நிலைக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.
தமிழக முதல்வரின் உதவிக் கரங்கள் இன வரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காகவும் நீள வேண்டுமென கோருகிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
திறமையற்ற கோத்தபாய அரசாங்கம் இலங்கையை பொருளாதார அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என குற்றம்சாட்டியுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் முழுமையான தோல்வி மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கவேண்டிய நிலையை ஏற்படு;த்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை தபால் நிலைய நாற்சந்தி வீதியில் எரி வாயு விநியோகிக்கப்பட இருப்பதாக நேற்று (09) மாலை வெளியான தகவலையடுத்து, அங்குச் சென்ற மக்கள், பலமணிநேரம் காத்திருந்த போதும், எரிவாயு விநியோகம் இடம் பெறவில்லை. சுமார் 3 மணிநேரம் காத்திருந்த மக்கள், வீதியின்…