நிலையவள்

தெமட்டகொடயில் அதே வீட்டில் சில நிமிடங்களில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவம்

Posted by - April 21, 2019
தெமடகொட மஹவில பூங்காவிற்கு அருகில் வீடொன்றினுள் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்று சில நிமிடங்களில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவமும் அதேவீட்டில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்பிரதேசத்தில் பொலிஸார் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். ஒரு வெடிப்புச் சப்தம் கேட்டவுடன் அவ்விடத்தில் ஒன்றுகூடுவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். இவ்வாறு…
மேலும்

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வு!

Posted by - April 21, 2019
கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் இன்று இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 188 பேர் உயிரிழந்துள்ளதுடன் 469 பேர் காயமடைந்துள்ளனர். 
மேலும்

நல்லூருக்கும் பாதுகாப்பு

Posted by - April 21, 2019
நாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலையத்து யாழ்.நல்லூர் ஆலயத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  தற்போது நல்லூர் ஆலய வெளி வீதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்.மரியன்னை பேராலயத்திற்கும் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

சமூக வலைத்தளங்கள் முடக்கம்

Posted by - April 21, 2019
நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டின் பாதுகாப்பிட்காக சமூக வலைத்தலங்களின் செயற்படுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் குறிப்பாக  முகப்புத்தகம், வைபர் மற்றும் வட்ஸ்அப் ஆகிய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை நாட்டில் இன்று  காலை முதல் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு…
மேலும்

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்..!

Posted by - April 21, 2019
நாட்டில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், இன்று மாலை 6.00 மணி தொடக்கம், நாளை காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும்  அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் நாயகத்தினால், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தெமட்டகொடையில் 8 ஆவது வெடிப்பு சம்பவம்!

Posted by - April 21, 2019
கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  அதன்படி தெமட்டகொடை, மாவில உத்யான வீதியில் அமைந்துள்ள வீடமைப்புத் திட்டத்திற்கு அருகிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும்

மீண்டும் வெடிப்புச் சம்பவம் ,இருவர் பலி

Posted by - April 21, 2019
நாட்டில் இன்று காலை இடம்பெற்ற தொடர்ச்சியான 6 குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, 7 ஆவது வெடிப்பு சம்பவமொன்று தெஹிவளை பகுதியில் பதிவாகியுள்ளது. அதன்படி குறித்த வெடிப்பு சம்பவமானது தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.  அதன்படி குறித்த…
மேலும்

யாழில் பாதுகாப்பு தீவிரம்

Posted by - April 21, 2019
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.  குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  வீதிகளில் ஒலிபெருக்கி வாகனங்களுடன் செல்லும்…
மேலும்

6 இடங்களில் குண்டு வெடிப்பு, 160 பேர் பலி, 370 பேர் காயம்

Posted by - April 21, 2019
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இதுவரை சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்களிலும் குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதேவேளை,…
மேலும்

குண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர் வைத்தியசாலையில்

Posted by - April 21, 2019
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளது.  அத்துடன் 402 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்