வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: போலி சான்றிதழ்கள் மற்றும் முத்திரைகளுடன் 5 பேர் கைது!

28 0

போலி ஆவணங்களைத் தயாரித்து, வெளிநாட்டு வேலைவாய்ப்பு தருவதாக மோசடி செய்த ஐந்து சந்தேகநபர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, பொரலஸ்கமுவ, மஹரகம, நிட்டம்புவ மற்றும் வத்தளை ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, துபாயில் வேலைகளை வழங்க பயன்படுத்தப்படும் 10 ஒப்பந்த கடிதங்கள், 27 விண்ணப்ப படிவங்கள், தொடர்புடைய ஆவணங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கணினி, அரச பாடசாலை அதிபர்களின் ஏராளமான போலியான முத்திரைகள், பல அரச அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் விபரங்கள் அடங்கிய படிவங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், போலியாக தயாரிக்கப்பட்ட கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பாடசாலை விடுகை சான்றிதழ்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.