நடுரோட்டில் பெண்ணை சுட்டுக் கொன்ற குடிவரவு அதிகாரி.. நியாயப்படுத்திய டிரம்ப் – மக்கள் கொந்தளிப்பு

21 0

டொனால்டு டிரம்ப் ஆளுகையின் கீழ் அமெரிக்காவில் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் மீது கடுமையான அடக்குமுறை இருந்து வருகிறது.ICE – குடிவரவு அதிகாரிகள் ஏகபோக அதிகாரம் பெற்று சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை, 37 வயதான ரெனி நிக்கோல் குட் என்ற பெண், ICE அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.மின்னிசோட்டாவை சேர்ந்த, மூன்று குழந்தைகளுக்குத் தாயான ரெனி அமெரிக்க குடிமகள் ஆவார்.

அவர் ICE அதிகாரிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஒரு Legal Observer ஆக இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த அந்த தினம், ரெனி ICE அதிகாரி அழுத்தத்தை புறக்கணித்து தனது காரில் இருந்து இறங்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அதிகாரி ரெனியின் முகத்திலேயே 3 முறை சுட்டுள்ளார். இதில் ரெனி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

US immigration officer fatally shoots woman, 37, in #Minneapolis, officials say.#ICE #Anonymoushttps://t.co/6El0b4jion pic.twitter.com/bsZwK0KIEb— Anonymous Scandinavia? Assange⏳ #NoExtradition (@AnonScan) January 7, 2026 ரெனி தனது காரை அதிகாரிகள் மீது மோத முயன்றதாகவும் அதிகாரி விளக்கம் அளித்தார்.

ஆனால் இந்தச் சம்பவம் மினியாபோலிஸ் நகரில் பெரும் போராட்டங்களை வெடிக்கச் செய்துள்ளது.இந்த விவகாரம் குறித்து பேசிய டிரம்ப், ICE அதிகாரிக்கு ஆதரவாக பேசியது மேலும் கோபத்தை தூண்டியுள்ளது.

அப்பெண் தனது காரை ICE அதிகாரி மீது ஏற்ற முயன்றுள்ளார் என்றும் இது தீவிர இடதுசாரிகளின் அணுகுமுறை என்றும் சாடினார்.

மின்னிசோட்டா நகர மேயர் ஜேக்கப் ஃப்ரே, இது பச்சைப் பொய் என்றும் ICE அதிகாரிகள் மினியாபோலிஸை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

வீடியோ ஆதரங்களின்படி அப்பெண் காரை திருப்ப முயன்றபோது அதிகாரி ஓடி வந்து சுடுவது பதிவாகி உள்ளது. ஆனால் அவர் இடிக்க முயன்றதற்கான ஆதாரம் இல்லை. இது அரசு பயங்கரவாதம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மக்களிடையே இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.