டிட்வா சூறாவளியினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
டிட்வா சூறாவளியினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபா கொடுப்பனவை ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் வழங்க ஆரம்பிக்கவுள்ளோம்.அனர்த்தம் இடம்பெற்று ஒரு மாதம் கடப்பதற்கு முன்னர் சேதமடைந்த வீதிகளில் 99 சதவீதமானவற்றை புனரமைக்க எமது அரசாங்கத்தால் முடிந்துள்ளது.வீடுகளை முற்றாக இழந்தவர்கள் ஒரு வருடம் நிறைவடைவதற்குள் தமக்கான வீட்டை அமைத்துக் கொள்ள உதவுவதே அரசாங்கத்தின் நோக்கம் என கூறியுள்ளார்.

