மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நாங்கள் 2025-ல் அதிமுகவிடம் கேட்டோம். அவர்கள் 2026-ல் தருவதாகக் கூறியுள்ளார்கள். அதிமுக எங்களை ஏமாற்றவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
ஈரோட்டில் நேற்று தேமுதிக ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள், கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார்.

