வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 3 பேரை இலங்கை விமானப்படையினர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்டுள்ளனர்.
இன்று (30) காலை வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில் மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான பெல்-212 ஹெலிக்கொப்டர் புறப்பட்டுச் சென்றது.
இதன்போது வெள்ளப்பெருக்கில் வீட்டினுள் சிக்கிய 3 நபர்களை விமானப்படை ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவின் மீட்புக் குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

