கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் விபத்து!

49 0

கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (11) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பஸ் ஒன்றின் சாரதி வீதிக்கு குறுக்காக சென்று கொண்டிருந்த மாடு மீது மோதாமல் இருக்க வேகத்தை குறைத்து பஸ்ஸை நிறுத்தியுள்ளார்.

இதன்போது பஸ்ஸின் பின்னால், பயணித்துக்கொண்டிருந்த பட்டா ரக வாகனமும் சடுதியாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பின்னால் பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் டிப்பர் வாகனம் சேதமடைந்துள்ளதான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸாசார் மேற்கொண்டு வருகின்றனர்.