வவுனியாவில் சிறுவனை காணவில்லை

39 0

வவுனியாவில் சிறுவனை காணவில்லை என பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, இயங்கராவூர், கற்குளம், சாளம்பைக்குளத்தை சேர்ந்த ஜெயசீலன் அபிஷேக் என்ற 16 வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

வீட்டில் நேற்றுமுன்தினம்(09.10.2025) காலை 04.30 மணியளவில் உறங்கிய மகனை காணாத நிலையில் அப்பகுதி முழுவதும் பெற்றோர் மற்றும் உறவினர்களால் அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையிலேயே சிறுவனின் பெற்றோரால் வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்து தேடி வருகின்றனர்.

 

குறித்த சிறுவன் தொடர்பில் தகவல் ஏதும் அறிந்தால் சிறுவனின் தாயின் தொலைபேசி இலக்கம் 0761698019இற்கு அல்லது சிறுவனின் மாமாவின் தொலைபேசி இலக்கம் 0774909955 அழைத்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.