யாழில் நகைகளையும் வெளிநாட்டு பணத்தினையும் திருடியவர் கைது

72 0

யாழ்ப்பாணம் – நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டுப் பணமும், நகைகளும் அண்மையில் திருடப்பட்ட நிலையில், இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள வீடொன்று, இரவுவேளையில் உடைக்கப்பட்டு பெருந்தொகை வெளிநாட்டுப் பணமும், நகையும் திருடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி  தலமையிலான குழுவினர்,  பிரதான சந்தேக நபரைக் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து பெருமளவு நகைகளையும், வெளிநாட்டு நாணயங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.