கிளிநொச்சியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த ஆசிரியர்

65 0

கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் ஆசிரியர் ஒருவர், ஆசிரியர் விடுதியில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்