உலகம் முழுவதும் இதய நோய்களால் ஏற்படும் மரணங்களில் 80 சதவீதம் தவிர்க்கப்படக்கூடியவை என்பது வருத்தத்திற்குரிய விடயம் என இதய நோய் நிபுணர் வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர், வைத்தியர் நிபுணர் சம்பத் விதானவசம் தெரிவித்தார்.
உலக இதய தினத்தை முன்னிட்டு கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
உலக இதய தினத்தின் முக்கிய நோக்கம், தவிர்க்கப்படக்கூடிய இதய மரணங்களைத் தடுப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படுவது என அவர் அங்கு வலியுறுத்தினார்.
எளிமையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் இதய நோய்களை குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
உடற்பயிற்சி, நல்ல உணவு முறைகள், புகைபிடிப்பதைத் தவிர்ப்பது, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் செயல்களைத் தவிர்ப்பது மற்றும் தவறாமல் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள் இதற்கு முக்கியமானவை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

