“ஓட்டு போடுங்கள், குழந்தைகளை பலியாக்காதீர்கள்”

61 0

“ஓட்டு போடுங்கள் – விரும்பும் நபர்களுக்கு, ஆனால் கூட்டம் போடாதீர்கள் – வாழ்வை தொலைக்க அதிலும் இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள்” என கரூர் சம்பவம் குறித்து ஆர்.பார்த்திபன் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: “ ‘கூட்டம்’ என்ற ஒற்றை வார்த்தைக்கு பின்…. 10,100,1000,1000000000000000000000 போன்ற பூஜ்ய உயிர்களின் அன்பும், பாசமும், தன்னலமற்ற ஊக்கப்படுத்துதலும், வலியும், வேதனையும் முடிவில் கேள்விக் கேட்பாறற்ற பிணங்களாய் வெள்ளை போர்த்தி, வண்ண மாலை சாத்தி, (இருந்தால்) உறவினர்களின் கண்ணீர் ஆற்றில் கரைக்கச் சொல்லி ‘கொடுத்து வைத்தவர்கள்’ ஓட்டு போடுங்கள் – விரும்பும் நபர்களுக்கு, ஆனால் கூட்டம் போடாதீர்கள் – வாழ்வை தொலைக்க அதிலும் இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

அது போல் அவர் முன்னதாக கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 31 பேரின் (ட்வீட் போட்ட நேரத்தில் 31 பேர் பலி, தற்போது 39 பேர் பலி)குடும்பங்களுக்கு யார் எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை. இன்னும் சிகிச்சையில் இருக்கும் 58 பேரும் விரைந்து குணமடைய அனைவரும் வேண்டிக் கொள்வோம் என்றும் ட்வீட் போட்டிருந்தார்.

அத்துடன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ கோர காட்சிகள் நம்மை கதிகலங்க வைக்கிறது. யாருக்கு ஆறுதல் சொல்வது எப்படி தேற்றுவது என தெரியாமல் தவிக்கிறேன். கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.” என பதிவிட்டுள்ளார்