யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் சிராவஸ்திபுர ரயில் நிலையத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை (26) அதிகாலை 1.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 57 வயதுடைய கண்டி பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

