மட்டக்களப்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுவாஞ்சிகுடி திருமுருகள் வீதியில் அமைந்துள்ள பற்றைக்குள் இருந்து வெள்ளிக்கிழமை(26) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தானர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் அவர்களுடைய உத்தரவுக்கமைய சடலத்தைப் பார்வையிட்ட களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவுக்கான திடீர்மரண விராணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு பேதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.
சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடி திருமுருகன் கோயில் வீதியைச் சேரந்த 2 பிள்ளைகளின் தந்தையான 71 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

