21 காட்டு யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளன – சுற்றாடல் பிரதி அமைச்சர்

76 0

 

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 21 காட்டு யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளதாக சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (25) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே சுற்றாடல் பிரதி அமைச்சர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுற்றாடல் பிரதி அமைச்சர்  இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பலவித காரணங்களினால் காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த “பாத்திய” காட்டு யானை உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை திரும்பி பார்க்க வைத்தது.

இதனால் காட்டு யானைகள் மீதான கவனம் அதிகரித்துள்ளது என சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி தெரிவித்துள்ளார்.