ஈழ அகதிகளின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது

20 0

கடந்த 2 ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வரும்இலங்கைத் தமிழர்கள் கைதுசெய்யப்படாமல், மனிதாபிமானஅடிப்படையில் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தசிவனேஸ்வரன்(49), கஜேந்திரன் (45), அவரது மகன் சஜித்(8) ஆகியோர், இலங்கை தலைமன்னார் கடற்கரையிலிருந்து ஃபைபர் படகில், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் நேற்று அதிகாலை வந்து இறங்கினர்.தகவலறிந்த மண்டபம் மரைன்போலீஸார் அவர்களை மீட்டு,காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின்னர், மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தனர்.

இதன்மூலம் 2022 மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தஇலங்கை அகதிகளின் எண்ணிக்கை 301 ஆக உயர்ந்துள்ளது.