பொத்துவில் பிரதேசத்தில் கோரவிபத்து – தந்தை, மகன் பலி . தாய், மகள் படுகாயம்

429 0

unnamed-1514அம்பாறை பொத்தவில் பகுதியில் நேற்று இரவு 8மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் பலியாகினர்.

சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயம் அடைந்தனது.

திருக்கோவிலில் இருந்து பொத்துவில் உள்ள ஆலய வழிபாட்டுக்குச் செல்லும்  வேளையில் பொத்தவில் றொட்டை பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளாண்மை அறுபடையின் இயந்திரத்தை ஏற்றிச் செல்லும் இழுவைப் பெட்யுடன் மோட்டார் சைக்கில் மோதுண்ட நிலையில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் திருக்கோவில் -02   நீதிமன்ற வீதியை சேர்ந்த ஜெயந்திரன் வயது 35, மகன் கஜேய் வயது 8 ஆகிய இருவரும் பலியாகினர்.

கிருஸ்ணகலா வயது 28 தாய், கஜானி வயது 3 மகள் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டு அங்கிருந்து அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மேலதிகச் சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளனர்.