மற்றுமொரு எரிபொருள் தாங்கிய கப்பல் துறைமுகத்தில் – நாளை விநியோகப் பணிகள் ; வலுச்சக்தி அமைச்சர்

137 0

மற்றுமொரு டீசல் மற்றும் பெற்றோல் தாங்கிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்துள்ளதாகவும் அதனை ; இறக்கும் பணிகள் சனிக்கிழமை ஆரம்பிக்கப்படும் என வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

;கடந்த 2 நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் டீசல் விநியோகிக்கப்பட்டது எனவும், விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு.பெட்ரோல் ; 92, 95 ஒக்டைன்  ஆகியவற்றின் விநியோகம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது என  எரிசக்தி அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தள்ளார்.