அநுராதபுரத்தில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர்-சுய தனிமைப்படுத்தலில் 100 பேர்

246 0

அநுராதபுரம்- கல்கிரியாகம, இரணவ பிரதேசத்தில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர்  அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்பினை பேணிய 100பேரை, சுகாதார தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரணவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அரச சேவையாளர்கள் சிலரையே இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சுகாதார சேவை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு சென்றுள்ளதாக கிடைத்த தகவலிற்கு அமைய அங்குள்ள பலரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்டபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.