கொரோனா ஊரடங்கு காலத்தில் திருமணம் நடத்துவதற்கென சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட திருமண மண்டபம் தங்கள் வீட்டுக்கே தேடி வந்து கொண்டிருக்கிறது.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலால் அனைத்துத் தொழிற்சாலைகள், கடைகள், கோவில்கள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து நிகழ்ச்சிகள், திருமணம், பிறந்தநாள், காது குத்து, மஞ்சள் நீராட்டு, கோவில்களில் முக்கிய விழாக்கள் ஆகிய அனைத்தும் தடைபட்டுள்ளது. கொரோனோ ஊரடங்கு காலத்தில் திருமண மண்டபங்கள், கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தோரணங்கள் இருக்கைகள் கூட இல்லாமல் இல்லங்களில் மிக எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பதால் மொய்ப்பண வசூல் செய்ய முடியாமல் திருமண வீட்டாருக்கு இழப்பும் ஏற்பட்டது.
ஊரடங்கால் திருமண விழாக்களுக்கு செல்ல முடியாததால் மணமக்களை வாழ்த்த முடியவில்லை. இந்த நிலையில் சுபகாரியங்களுக்கு அலங்கார மேடைகள் அமைத்துத் தரும் தொழில் செய்து வருபவர் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் ஹக்கீம் என்பவர்க்கு ஒரு சிந்தனை தோன்றியது.